Friday, August 16, 2013

SHOCK...ஷாக்

இந்து 16.8.2013 இதழின் முதல் பக்க செய்தியொன்றில்  வாராக்கடன்கள் காரணமாக பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ள இழப்புகள் குறித்து சி.பி.ஐ விசாரணை துவங்கியிருப்பதை செய்தியாளர் தேவேஷ் கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

அதில் மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் மதிப்பு ஐந்து லட்சம் கோடியை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இத்தொகை 2 லட்சம் கோடிகளாக இருந்தது. மொத்த கடன்களில் 31.3.2009 ல் 4.87 சதவீதமாக இருந்த மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் 31.3.2012 ல் 8.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய கடன்களில்தான் மிகப்பெரும் தொழிலதிபர்கள் புகுந்து விளையாடியிருப்பதாக புகார். 

அண்மையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாராக்கடன் வைத்துள்ள முதல் பெரிய 30 கணக்குகளை நெருக்கி வசூலித்தாலே அவ்வங்கிகளின் பாலன்ஸ் ஷீட்டுகளை தேற்றிவிடலாம் என்று கூறியதை இச் செய்தியோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம்.

SHOCK... ஷாக்...



இந்து  16.8.2013 நாளிதழின் நடுப்பக்க கட்டுரை - அரசு காச நோய் கட்டுப்பாடு திட்டம் பற்றியது- டி. ஜேக்கப் ஜான் , முன்னாள் அகில இந்தியத் தலைவர், இந்திய குழந்தை மருத்துவர் கழகம்- அதில் உள்ள இரண்டு  தகவல்கள்:

1 ) உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் உள்ள இந்தியாவில் உலகக் காச நோயாளிகளில் 26 பேர் உள்ளனர்.

2) இந்திய பொருளாதாரத்திற்கு காச நோய் காரணமாக ஏற்படும் இழப்பு 23.7 பில்லியன் டாலர்கள். (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 142200 கோடிகள்). ஆனால் அரசின் புதிய தேசிய காச நோய் கட்டுப்பாடு திட்டத்திற்கான  ( REVISED NATIONAL TB CONTROL PROGRAMME- RNTCP) செலவினம் 200 மில்லியன் டாலர் மட்டுமே. அதாவது இந்திய ருபாய் மதிப்பில் ரூ 1200 கோடிதான்.