Friday, January 10, 2014

பொருளியல் அரங்கம்-தீக்கதிர்-டிசம்பர் 28, 2013


க.சுவாமிநாதன் 

 
வறுமை கொடிது

கொடிது கொடிது வறுமை கொடிது.. அதனினும் கொடிது இளமையில் வறுமை.. இது அவ்வையார் மொழி.

குழந்தைகள் மத்தியில் வறுமை- ஜெர்மனியில் 10 சதவீதம். பிரிட்டனில் 20 சதவீதம். ருமேனியாவிலோ 33 சதவீதம். ஜெர்மனி உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. 135 டாலர் பில்லியனர்கள் (6400 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து ) உள்ள நாடாகும்.ஒரு பெற்றோர் குடும்பங்கள் (SINGLE PARENT FAMILIES ) 1996-ல் ஏழில் ஒன்றாக இருந்தது. 2009-ல் அது ஐந்தில் ஒன்றாக உயர்ந்துவிட்டது.

பெரும்பாலும் தாய்மார்கள் பராமரிப்பிலேயே குழந்தைகள் வளர்கிறார்கள். வறுமையின் சுமையையும் பெண்களே தாங்குகிற பாலின பாரபட்சத்திற்கு இது ஓர் சாட்சியம். நிறைய பேர் மேலை நாடுகளில் பாலின சமத்துவம் நிலவுவதாக நினைக் கிறார்கள்.

2011 காவல்துறை பதிவேடுகளின்படி 14 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 6.7 சதவீத மானவர்கள் கிரிமினல் நடவடிக் கைகளுக்கான வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர்.

சொர்க்கபுரியின் சோகம்
  
அமெரிக்காவின் வறுமை குறித்த தகவல்களை வறுமை யில் ஆழ்ந்துள்ள குழந்தைகளுக்கான தேசிய மையம்(NATIONAL CENTER FOR CHILDREN IN POVERTY) வெளியிட்டுள்ளது. 2010 அமெரிக்க நாட்டின் சென்சஸ் அடிப்படையில் இவ்விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் மத்தியில் வறுமை நிலவுகிற டாப்-25 அமெரிக்க நகரங்களில் இது 32 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை உள்ளது.டெட்ராய்ட் நகரத்தில் 53.6 சதவீத மாக இது உள்ளது. பப்பலோ (BUFFALO) நகரத்தில் 47 சதவீதம். தேச அளவில் குழந்தை வறுமை விகிதம் 22 சதவீதமாக இருந்தது. 20 ஆண்டுகளில் இவ்வளவு அதிக மாக இச்சதவீதம் இருந்ததில்லை. 2000க்குப் பிறகே 6 சத வீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் கூடி யிருக்கிற வறுமை 1965-ல் இருந்த அளவுகளோடு ஒப்பிடக் கூடியதாக உள்ளது.

ஒரு கோடியே 64 லட்சம் குழந்தைகள் வறுமையில் வாழ்கிற தேசத்தில் டாப்-1 சதவீத பணக்காரர்கள் வருமானம் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் ஊதியங்களோ 0.4 சதவீதமே அதிகரித்துள்ளது.இந்த லட்சணத்தில் நவம்பர் 1 முதல் சத்துணவு உத வித் திட்டத்தில் (SUPPLEMENTARY NUTRITIONAL ASSISTANCE PROGRAAME) 5 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது. என்ன அர்த்தம்! வறுமையின் பிடி யில் உள்ள குழந்தைகளுக்கு இன்னும் சோறு குறையும் என்பதுதான்.

“இந்த சதவீதங்கள் தேசத்தின் மிகப் பெரும் வெட்கம்“ என மேற்கண்ட மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் கர்டிஸ் ஸ்கின்னர் கூறியுள்ளார். வெட்கத்தைப் பார்த் தால் கார்ப்பரேட் அமெரிக்கா லாபம் பார்க்க முடியுமா!

வறுமை வளர் நாடுகள்

அண்மையில் இந்தோனேசியா பாலியில் நடந்து முடிந்துள்ள உலக வர்த்தக அமைப்பு மாநாடு (W.T.O ) வளர்முக நாடுகளை, வறுமை வளர்கிற நாடுகளாக மாற்றி யிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பு, வர்த்தகம் சம்பந்தப் பட்டது அல்ல. அது ஒரு நாடு தனது ஏழை மக்களின் நலனை பாதுகாப்பதற்கான உரிமை என்று இந்தியா தனது வரைவு ஆவணத்தில் கூட வலியுறுத்தி இருந்தது. ஜி 33 குழும நாடுகளும் மேலை நாடு களின் நிர்பந்தங்களை எதிர்த்து குரல் கொடுத்தன.ஆனால் கடைசியில் “சமாதான சரத்து” (PEACE  CLAUSE ) என வர்ணிக்கப்படுகிற ஒப்பந்தத்தின் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே உணவுப் பாதுகாப்பை கேள்வி யாக்குகிற அபாயத்திற்கு நிவாரணம் கிடைத் துள்ளது.

உட்டோ கூறுவது, விவசாய மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மேல் மானியம் இருக்க முடியாது. ஆனால் பச்சைப் பெட்டி மானியம் (GREEN BOX ) என்ற பெயரில் மேலை நாடுகள் தருகிற நேரடி பணம் அளிப்பு (DIRECT CASH TRANSFER) இந்த வரம்புக்குள் வருவதில்லை. ஜி 33 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு சட் டத்தை தற் போது நிறைவேற்றியுள்ள இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடு களுக்கே இந்த நான்காண்டு கால அவகாசமும் கிடைக்கும். இனி நிறைவேற்றப் போகிற நாடுகளின் திட்டங்கள் கேள்விக்கு ஆளாகலாம். மொத்தத்தில் உரிமை என்று இந்திய அரசே முழங்கிய உணவுப் பாதுகாப்பு, வர்த்தக பேரத்தின் வரம் பிற்குள் வந்துவிட்டது.

கொசுறு

*அந்நிய முதலீட்டு பங்குகளைக் கொண்ட 766 தனி யார் இந்திய நிறுவனங்களின் 2011-12 ம் ஆண்டின் நிகர லாபம் 22 சதவீதம் குறைந்துள்ளது. இது ரிசர்வ் வங்கி தணிக்கை அறிக்கை தருகிற தகவல். இந்த நிறுவனங்களில் அமெரிக்கா, பிரிட்டன்,ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த முதலீடுகள் உள்ளன.

* மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் - சிறு வணிக மெகா நிறு வனம் தனது ஊழியர்களுக்கு வழங்கி வந்த வரையறுக்கப் பட்ட பயன் கொண்ட பென்சன் (DEFINED  BENEFIT ) திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி வரையறுக்கப் பட்ட பங்களிப்புத் திட்டத்தை (DEFINED CONTRIBUTION ) அறிமுகம் செய்துள்ளது.
* 2004-2012 க்கு இடைப்பட்ட காலத்தில் விதிமுறை மீறல்களுக்கு ஆளான எச்.எஸ்.பி.சி, மார்கன் சேஸ் உள் ளிட்ட பன்னாட்டு வங்கிகள் நிறுவனங்களுடன் 242 சமரச அபராத உடன்பாடுகளை அமெரிக்க நீதித்துறை செய்து கொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளத

No comments:

Post a Comment